BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்?
பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரத்தில் இந்தோனீசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; இந்தப் பயணத்தின் போது பிரமோஸ் விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிலிப்பைன்ஸிற்கும் இந்தியா பிரமோஸ் ஏவுகணைகளை விற்றுள்ளது. இந்தியா தனது சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிற நாடுகளுக்கு விற்பது ஏன்? அதற்கு ரஷ்யாவின் அனுமதி தேவையா?
இ20 பெட்ரோல் கார், பைக் என்ஜினை பாதிக்குமா? விஸ்வரூபம் எடுக்கும் கேள்விக்கு நிபுணர்கள் பதில்
இந்தியாவில் பெட்ரோலுடன் உயிரி எரிபொருளை அதிகளவில் கலக்கும் அரசின் முடிவுக்கு வாகன உரிமையாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'இ20' பெட்ரோல் வாகனங்களின் மைலேஜைக் குறைத்துள்ளதுடன் செலவை அதிகரிக்கும் என்றும் வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு நிபுணர்கள் அளிக்கும் பதில் என்ன?
இதயம் முரளி: தந்தை 'சொல்லாத காதலை' மகன் சொன்னாரா? ஊடக விமர்சனம்
பருவங்களைக் கடந்த கைகூடாத காதல் கதையான இதயம் முரளி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஊடகங்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் என்ன? இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
விஜய் குற்றச்சாட்டுகளுக்கு திமுக பதில்: 9 மாதம் முன்பு கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு நடந்தது என்ன?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய விஷயங்கள் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அதேவேளையில் அவர் இந்தச் சம்பவத்தில் தனக்கு இருக்கும் பொறுப்பைப் புறக்கணிப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
மீன் தொட்டி உள்பட உங்கள் வீட்டில் வைஃபை சிக்னலை பாதிக்கும் 4 விஷயங்கள்
உலகம் வைஃபை மூலம் இயங்குகிறது, ஆனால் உங்கள் மதிய உணவு உட்பட விசித்திரமான சில விஷயங்கள் அதற்குத் தடையாக நிற்கக்கூடும்.
கணவன் சிதையில் மனைவியை உயிரோடு எரிக்கும் 'உடன்கட்டை' ஏறும் வழக்கத்தை தடுத்த ஆங்கிலேயர்
1829-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்க் 'சதி' எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைத் தடை செய்தார். சதி என்பது ஒரு பழமையான இந்து வழக்கமாகும்; இதில் கணவனை இழந்த பெண் ஒருத்தி, தன் கணவனின் சிதையில் உயிருடன் எரிக்கப்பட்டார்
'பெற்றோருடன் சேர்ந்து பீடி சுற்றிய சிறுமிகள்' கபடியில் சாதனைகளை குவிக்க தொடங்கியது எப்படி?
காளத்தி மடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் அடங்கிய அணி, கடந்த ஐந்து ஆண்டுகளாக மூத்த வீராங்கனைகளுக்கு சற்றும் சளைக்காதவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
இரானில் இந்தியா முதலீடு செய்துள்ள சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் இரானின் சாபஹார் துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதமடைந்ததை இரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதன் விளைவுகள் இந்தியா மீதும் தாக்கம் செலுத்துமா?
இரக்கமின்றி சொந்த குழந்தையை பல ஆண்டுகள் நோய்வாய்ப்படுத்திய தாய் - குழந்தை மீண்டது எப்படி?
தனது தாயார் தனக்குக் கடுமையான நோய் இருப்பதாக மருத்துவர்களை நம்ப வைத்ததைத் தொடர்ந்து, நினா ப்ளோம் தேவையற்ற பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு உள்ளாகிப் பல ஆண்டுகளைக் கழித்தார். தனக்கு இருப்பதாகக் கூறப்பட்ட நோய்க்குப் பின்னால் இருந்த குழந்தை துஷ்பிரயோகத்தை ஒரு மருத்துவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மைக் கதையை அவர் விவரிக்கிறார்.
காரைக்குடி: 10 வயது சிறுவனின் ஆணுறுப்பில் ஒரு பகுதி நீக்கப்பட மருத்துவர்களின் அலட்சியம் காரணமா?
காரைக்குடியில், 'தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் 10 வயது சிறுவனின் ஆணுறுப்பை அகற்றும் நிலை ஏற்பட்டதாக' சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன?
காதல் உறவை காக்க காதலர், நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்றதாக மனைவி கைது - என்ன நடந்தது?
திருமணத்திற்குப் புறம்பான காதல் உறவைத் தக்கவைக்க காதலர் மற்றும் நண்பருடன் சேர்ந்து நிஜாமாபாத்தில் பெண் ஒருவர் தனது கணவரைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
சூர்யவன்ஷியின் குறைகள் பற்றி விவாதிக்கப்படும் வேளையில் வைரலாகும் ஆர்ச்சரின் பழைய பேட்டி
வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க விரும்பினால், அவர் ஐபிஎல்லின் பிளாட் பிட்ச்களில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு களங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இந்தியா: இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் - பிபிசி புலனாய்வு
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக 'பிபிசி ஐ' புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
'வாஷிங் மெஷின் டிரம்மில் அடைப்பு': பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்களின் குழந்தைகளுக்கு காப்பகத்தில் என்ன நடந்தது?
சிறு குழந்தைகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் பெண் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பழைய புழுங்கல் அரிசிக்கு அதிக மவுசு ஏன்? சமைக்கும் போது என்ன நடக்கிறது?
பொதுவாக புதிய உணவுப் பொருட்களுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கும். ஆனால் அரிசி விஷயத்தில் மட்டும் இதற்கு நேர்மாறான நிலை காணப்படுகிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியை விட, ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட புழுங்கல் அரிசிக்கு அதிக விலை கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர்.
திமுக - அதிமுகவை இணைக்கும் கருணாநிதி - எம்ஜிஆரின் முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
'மாமனாரை கொன்ற மருமகளை கைது செய்யாத காவல்துறை': தற்காப்பு பற்றி சட்டம் கூறுவது என்ன?
"புலன் விசாரணையில் தற்காப்புக்காக கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆகவே பிஎன்எஸ் சட்டப்பிரிவு 34ஐ சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும்" எனக் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
பெண்ணின் வீட்டுக்கு அடியில் '40,000 உடல்கள்' - விசாரணையில் என்ன தெரியவந்தது?
1996ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று, புதுப்பித்தல் பணிகளின் போது, மெர்சிட் கைமரைஸ் டோஸ் அஞ்சோஸ் எலும்புகளைக் கண்டெடுத்தார் - அவை சுமார் 1770 மற்றும் 1830ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட்டதும், அத்துடன் தோராயமாக 40,000 சடலங்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுவதுமான, நீண்ட காலமாக காணாமல் போன 'புதிய கருப்பர்களின் மயானத்தின்' எச்சங்கள் ஆகும்.
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரான் போருக்கு முந்தைய நிலைக்கும் கீழே சரிந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலையில் இவ்வளவு கடுமையான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? அது எப்போது குறையும்?
இரானின் முடக்கப்பட்ட சொத்துகள் இந்தியா, சீனா உள்பட எந்தெந்த நாடுகளில் உள்ளன?
முடக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவிப்பது என்பது, இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிகவும் விவாதத்திற்குரிய மற்றும் சிக்கலான பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட எந்தெந்த நாடுகளில் அந்த சொத்துகள் உள்ளன?
'அணு ஆயுதங்களை அதிகரிக்கும் சீனா': அமெரிக்கா, ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் எந்த இடத்தில் உள்ளது?
சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணுசக்தி திறன்களை வேகமாக நவீனப்படுத்தியுள்ளது என்று மேற்கத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
'தோண்டத்தோண்ட எலும்புக் கூடுகள்': இலங்கையின் செம்மணி - சித்துபாத்தி புதைகுழி கவனம் பெறுவது ஏன்?
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது. குறிப்பாக மனித புதைகுழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
40 வயதை தாண்டிய ஆண்கள் அவசியம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
முறையான மருத்துவப் பரிசோதனைகள் நோய்களைக் கண்டறிவதுடன், வாழ்க்கை முறையை மேம்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிக்கின்றன. எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் சில முக்கியமான மருத்துவப் பரிசோதனைகளைத் தவறாமல் செய்துகொள்வது அவசியமாகும்
பூம்புகார் துறைமுகம் எங்கே இருந்தது? அதற்கு என்ன ஆனது? ஆய்வில் புதிய தகவல்
சங்க இலக்கியங்களில் கூறப்படும் பூம்புகார் நகரின் இருப்பு மற்றும் வரலாறு அறிவியல்பூர்வமாக எவ்வளவு தூரம் உறுதி செய்யப்பட்டுள்ளது? கடலுக்குள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படும் இந்த நகரம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் தெரிய வந்தது என்ன?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































