BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
"சிஐஏவின் ஏமாற்றும் உத்தி" - இரானுக்குள் அமெரிக்க விமானப்படை வீரர் மீட்பு எப்படி நடந்தது?
தெற்கு இரான் மலைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E போர் விமானத்திலிருந்து குதித்து, 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தனிமையில் மறைந்திருந்த அமெரிக்க விமானப்படை வீரரை, சிஐஏ மற்றும் ராணுவத்தின் ஒரு துணிச்சலான கூட்டுத் தேடுதல் நடவடிக்கை மூலம் அமெரிக்கா வெற்றிகரமாக மீட்டுள்ளது.
ஹாட்ரிக் தோல்வியடைந்த சிஎஸ்கே போட்டியைத் தவறவிட்டது எங்கே?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி அடைந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஆர்சிபி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரூ.167 கோடிக்கு ஏலம் போன யசோதா, கண்ணன் ஓவியம் - ராஜா ரவிவர்மா படைப்பின் தனித்துவம் என்ன?
புகழ்பெற்ற கலைஞர் ராஜா ரவி வர்மாவின் 19-ஆம் நூற்றாண்டு ஓவியம் ஒன்று, ஏலத்தில் புதிய சாதனையைப் படைத்து, இதுவரை விற்கப்பட்ட இந்தியக் கலைப்படைப்புகளிலேயே மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக மாறியுள்ளது.
இந்தியாவில் குடிநீர் மற்றும் பீர் விலை உயர இரான் போர் ஏன் காரணமாகக் கூடும்?
இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர். ஆனால், இரானுடனான போர் இந்தியாவின் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாட்டில் குடிநீர் துறையை ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
நேரலை, "நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்" - இரானை கடுமையாக எச்சரித்த டிரம்ப்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
இரான் படைகளிடம் சிக்காமல் தடுத்து, 2-வது வீரரை அமெரிக்கா மீட்டது எப்படி? புதிய தகவல்கள்
இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்து இரண்டாவது வீரரையும் தேடிக் கண்டுபிடித்து மீட்டுவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது?
விண்வெளியிலிருந்து பார்க்கும் போது பூமி எப்படி இருக்கிறது? - ஆர்டெமிஸ் 2 குழு எடுத்த புகைப்படம்
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான பாதி தூரத்தை ஆர்டெமிஸ் 2 விண்கலக் குழுவினர் கடந்து செல்லும்போது எடுத்த பூமியின் முதல் உயர்தரப் படங்களை நாசா வெளியிட்டுள்ளது .
ஆண்களுக்கும் தோன்றும் கர்ப்ப கால அறிகுறிகள் பற்றி தெரியுமா?
கூவாட் சிண்ட்ரோம் என்பது கர்ப்பிணிப் பெண்களின் இணையர்களில் ஏறக்குறைய பாதிப் பேருக்கு ஏற்படக்கூடிய ஒரு நிலையாகும். இதன் காரணமாக, கர்ப்பம் தரித்த பெண் மட்டுமல்லாமல், அவரது துணையும் கர்ப்பகாலத்தின் அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்குவார்கள்.
'மரியே வாழ்க' ஜெபம் எவ்வாறு தோன்றி உலகம் முழுவதும் பரவியது? ஜெபமாலை உருவானது எப்படி?
பைபிளில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாவற்றையும்விட இயேசுவின் தாய் மரியாவுக்காக உருவாக்கப்பட்ட 'மரியே வாழ்க' ஜெபம் உலகம் முழுக்கப் பிரபலமானது எப்படி?
இஸ்ரேல் தனது ராணுவ வலிமையால் மட்டுமே இரானை வெல்ல முடியாது - ஏன் தெரியுமா?
மத்திய கிழக்கில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே அமைதியை நிலைநாட்டுவதற்குப் போதுமானது இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், இரான் விஷயத்திலும், காஸா, லெபனான், சிரியா விஷயத்திலும் இஸ்ரேல் செய்து கொண்டிருப்பது என்ன? அந்நாட்டு மக்களிடையே அதுகுறித்தான பார்வை எப்படி இருக்கிறது?
சிறுமியை நகத்தால் கீறிய அதேநாளில் தந்தையை கடித்த நாய் - சிறு அலட்சியத்தால் பறிபோன உயிர்
சிறுமியின் தந்தையையும் இதே நாய் கடித்த நிலையில் தடுப்பூசி எடுத்ததால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் நகக் கீறல் தானே என அலட்சியமாக விட்டதால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
நாமக்கல்: பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கு அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்களா?
நாமக்கல் அருகே பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கென அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற புதிய முயற்சியில் பிபிசி தமிழுக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கே எங்களது குழு கள ஆய்வு செய்தது.
'அடுப்பில் கரி அறவே படியாது': இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு
இந்திய விஞ்ஞானிகள் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக செயற்கை எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர். எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது என்பது உண்மையா?
வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை அருந்துவது உடல் நலனுக்கு நல்லது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இது பாரம்பரிய சீன மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக உள்ளது. அது பற்றி அறிவியல் கூறுவது என்ன?
இரானுக்கு பதிலடி தராத சௌதி உள்ளிட்ட இந்த 5 வளைகுடா நாடுகளின் ராணுவ பலம் என்ன?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை இரான் குறிவைக்கத் தொடங்கியது. அமெரிக்கத் தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்திய அந்த நாடுகளும் வலுவான ராணுவ சக்தியைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த நாடுகள் இதுவரை இரான் மீது தாக்குதல் நடத்தவில்லை.
ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்?
ஐஆர்என்எஸ்எஸ் - 1எஃப் செயற்கைக்கோளில் இருந்த அணுக் கடிகாரம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி செயலிழந்ததுடன் இந்தியாவின் சொந்த 'ஜிபிஎஸ்' எனப் பெயர் பெற்ற நாவிக் (NavIC) அமைப்பின் செயல்பாடு முடங்கியது. முன்னர் இந்த அமைப்பு இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு - ஐஆர்என்எஸ்எஸ் (Indian Regional Navigation Satellite System - IRNSS) என்று அழைக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் செயல் முடக்கத்துடன் இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டும் திறன் முடிவுக்கு வந்துள்ளது.
'கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சியால் இந்தியாவில் வறட்சி' - 8,200 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?
வடக்கு அட்லாண்டிக் பகுதியிலும் கிரீன்லாந்திலும் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சி, இந்தியாவின் பருவமழையை பலவீனப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 8,200 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது?
இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக் கிராமங்கள் மீது தீவிரவாத யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய வயல்களுக்குத் தீ வைத்துள்ளனர்.
கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் - 1991ல் என்ன நடந்தது?
கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள சோமையம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அடையாளங்கள் தொடர்பான கட்டுப்பாடு, ஊர் மக்களால் ஒருங்கிணைந்து கடைபிடிக்கப்படுகிறது.
போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?
பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், இரான் மூன்றும் இந்த போர் எவ்வாறு முடிய விரும்புகின்றன?
வருசநாடு அருகே புலிகள் வாழும் காப்புக்காட்டில் 5 பேருக்காக செயல்படும் வாக்குச்சாவடி
தேனி மாவட்டம் வருசநாடு மலைப் பகுதியில் ஐந்து வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதன் மூலம் ஊடகங்களில் இப்பகுதி கவனம் பெற்றது.
மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?
சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் சம்பளச் சீட்டு கிடைப்பதில்லை. அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? சம்பளச் சீட்டு இல்லாமல் அவர்கள் எவ்வாறு வீட்டுக் கடன் பெற முடியும்?
நீங்கள் படித்து முடித்ததும் முதல் வேலை கிடைக்க என்ன செய்யலாம்? 5 யோசனைகள்
வேலை கிடைப்பதற்கு இளைஞர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்ய வேண்டும் என வேலைவாய்ப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்

























































































