காணொளி: பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மனிதர்களை கொல்லப் போகிறதா?

காணொளிக் குறிப்பு,
காணொளி: பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மனிதர்களை கொல்லப் போகிறதா?
பிரசுரிக்கப்பட்டது

கிளாட் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை உருவாக்கிய அந்த்ராபிக் நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் இவான் ஹுபிங்கர், செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக முன்னேறி வருவதால், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அதன் காரணமாக மனிதகுலமே அழிந்துபோக பத்து சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் ஏற்படும் ஆபத்து குறைவாகவே இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த தொழில்நுட்பம் விரைவில் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும் அளவுக்கு வளரக்கூடும் என்றும், அப்படி நடந்தால் அது மனிதகுலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மனிதர்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது குறித்து அவர் விரிவான விளக்கத்தை வெளியிடவில்லை.

எனவே, தற்போதைய முக்கியமான விவாதம் “செயற்கை நுண்ணறிவு உண்மையில் ஆபத்தானதா?” என்ற கேள்வியிலிருந்து, “செயற்கை நுண்ணறிவு எந்த அளவுக்கு ஆபத்தானது?” என்ற கேள்வியை நோக்கி மாறி வருகிறது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு