You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 400 ஆண்டுகளாக செழிக்கும் பழம்பெரும் தஞ்சாவூர் ஓவியங்கள்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் ஓவியங்கள் வெறும் கலைப் படைப்புகள் மட்டுமல்ல; அவை தங்கம், கற்கள் மற்றும் 400 ஆண்டுக்கால வரலாற்றின் மரபுச் சின்னங்கள்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் இந்தக் கலையில் 40 ஆண்டுகளைச் செலவிட்டு கைதேர்ந்துள்ளார். அவரது அர்ப்பணிப்புக்கு இந்திய அரசிடம் இருந்து மதிப்புமிக்க ‘சிற்ப குரு’ விருது கிடைத்துள்ளது. இத்தகைய மதிப்புமிக்க தஞ்சாவூர் ஓவியத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன?
கடந்த 2007-ஆம் ஆண்டில், இந்த கலை படைப்பிற்கு புவிசார் குறியீடு மூலம் உரிய அங்கீகாரம் கிடைத்தது. மிகவும் நுணுக்கமாக உருவாக்கப்படும் இந்த ஓவியத்தை வரைய இரண்டு மாதங்கள் வரையிலான உழைப்பு தேவைப்படுகிறது.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு