விஜய் பதவியேற்பு விழாவில் திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்பு: கேமராவில் உறைந்த சுவாரஸ்ய தருணங்கள்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஞாயிற்றுக்கிழமை விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை சுமார் 10 மணியளவில் விஜய் பதவியேற்றார். பின்னர் தவெகவைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ஏ. ராஜமோகன், டி.கே. பிரபு, எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

விழா மேடையிலேயே முக்கியமான கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

  • ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்
  • 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை'
  • போதைப்பொருளை தடுக்க சிறப்பு நடவடிக்கை

ஆகியவற்றை அமல்பமுத்தும் கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.

விஜய் தலைமையில் தவெக புதிய அரசு அமைத்ததன் மூலம் சுமார் அறுபது ஆண்டுகளாக இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சகாப்தம் முடிவுக்கு வந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு