You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்தியாவில் மே மாதத்தில் எரிபொருட்களின் விலை 4 முறை உயர்வு
மே 15-ஆம் தேதி முதல் முறையாக ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு மே 19-ஆம் தேதி 87 முதல் 91 பைசா வரை உயர்த்தப்பட்டது.
மூன்றாவது முறையாக மே 23 அன்று மீண்டும் 87 முதல் 91 பைசா வரை உயர்த்தப்பட்டது. நான்காவது முறையாக மே 25 அன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.61 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2.71 உயர்த்தப்பட்டது.
இதன் பொருள் மே 15 முதல் மே 25 இடையே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.7 முதல் ரூ.7.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் தான் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது, இதனால் இந்தியா போன்ற இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகள் விளைவுகளைச் சந்தித்து வருகின்றன.
அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு எரிபொருளை குறைந்த விலைக்கு விற்று வந்ததாகவும் அதனால் தினசரி இழப்புகளைச் சந்தித்து வந்ததாகவும் அரசாங்கம் கூறுகிறது. அதனால் அந்த இழப்புகளைக் குறைக்க விலை உயர்வு அவசியமாவதாகவும் தெரிவிக்கிறது.
நுகர்வோருக்குப் பலன்களை வழங்க நீண்ட காலத்திற்கு விலை உயர்வை தடுத்து நிறுத்தியதாகவும் கலால் வரியைக் குறைத்ததன் மூலம் சுமையைக் குறைத்ததாகவும் அரசாங்கம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு