வெனிசுவேலா நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள், நிலைகுலைந்த மக்கள் - பேரழிவை உணர்த்தும் படங்கள்

பட மூலாதாரம், Reuters
வெனிசுவேலாவில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், 1900-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டில் பதிவான மிக வலுவான நிலநடுக்கம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டைத் தாக்கிய முதல் நிலநடுக்கம் 7.2 என்ற அளவாகப் பதிவானது. அதைத் தொடர்ந்து ஒரு நிமிடத்துக்குள் 7.5 என்ற அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கப் பட்டியலின்படி, கடந்த 1900-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி வெனிசுவேலா கடற்கரைக்கு அருகில் 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட கராகஸ் மற்றும் பிற பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் மற்றும் சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழலாம் என்ற பயத்தால், பலர் சாலைகளில் கூடாரங்களை அமைத்துத் முகாமிட்டு தங்கத் தொடங்கியுள்ளனர்.
வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக உள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் கூறுகையில், கராகஸின் வடக்கே உள்ள லா கைரா மாநிலமே நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அங்கு "டஜன் கணக்கான" கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அந்தப் பகுதியை அவர் "பேரிடர் மண்டலம்" என்று தெரிவித்துள்ளார்.
32 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் தகவல்கள் குறித்துப் பேசிய இடைக்கால அதிபர், "இந்த எண்ணிக்கையில் லா கைரா மாநிலத்தில் இருந்து வரக்கூடிய தகவல்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் சில புகைப்படங்கள்:

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Sarah Jalali and Paul Brown/X

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Reuters


பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், EPA

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், EPA

பட மூலாதாரம், EPA
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























