முதலமைச்சரை விமர்சித்த நயினார் நாகேந்திரன் கூறிய விளக்கம் என்ன?

பட மூலாதாரம், NainarNagendran/X
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "சட்டப் பேரவையில் அப்பாவை காணோம் என தேடும் முதலமைச்சர் விஜய்" எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சு சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"பதவிக்கு ஏற்றார் போல் ஒரு தலைவர் பேச வேண்டும் தெருமுனை பேச்சாளர் போல பேசக்கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
" நயினார் நாகேந்திரன் அநாகரிக பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என அமைச்சர் வினோத்தும் வலிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தினி என்பவர் தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆன்லைன், சைபர் கிரைம் போர்டல் மூலம் புகார் அளித்துள்ளார்.
பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் "தனது பேச்சு திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளது" என்று நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



