பங்குச் சந்தை மதிப்பீட்டில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ள தைவான் - இனி வரும் காலம் எப்படி இருக்கும்?

தைவானின் டிஎஸ்எம்சி நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தைவானின் டிஎஸ்எம்சி நிறுவனம், அதன் துறையில் உள்ள மற்ற எல்லா நிறுவனங்களையும் விஞ்சி நிற்பதாகத் தெரிகிறது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பங்குச் சந்தை மதிப்பீட்டில் திங்கள்கிழமை அன்று தைவான் இந்தியாவை முந்தியது.

இதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியக் காரணம், உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் நிறுவனத்தின் (டிஎஸ்எம்சி) பங்குகளில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியே ஆகும்.

பங்குச் சந்தை மதிப்பீடு அல்லது சந்தை மூலதனம் என்பது ஒரு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பின் கூட்டுத் தொகையாகும்.

உதாரணமாக, இந்தியாவில் உள்ள தேசிய பங்குச்சந்தையான என்எஸ்இ மற்றும் மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 4.92 டிரில்லியன் டாலராக உள்ளது.

பங்குச் சந்தை மதிப்பீட்டில் தைவான் இந்தியாவை முந்தியிருந்தாலும் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி, இந்தியாவின் 4.15 டிரில்லியன் டாலர் பொருளாதாரமானது, தைவானின் 977 பில்லியன் டாலர் ஜிடிபியை விட இன்னும் மிகப் பெரியதாகும், மேலும் இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

ஆனால், 4.15 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவை, 977 பில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட தைவான் முந்தியுள்ளது என்பதையும் இதன் மூலம் காண முடிகிறது.

ப்ளூம்பெர்க் தரவுகளின் படி, திங்கட்கிழமை நிலவரப்படி தைவான் பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு 4.95 டிரில்லியன் டாலராக உயர்ந்தது, அதே நேரத்தில் இந்தியப் பங்குச் சந்தைகளின் மதிப்பு 4.92 டிரில்லியன் டாலராகக் குறைந்தது.

தைவானின் பங்குச் சந்தை உலகின் ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாக மாறியது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங்கிற்கு அடுத்தபடியாக தைவான் உருவெடுத்தது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், திங்கள் கிழமை முதல் ஐந்து இடங்களில் மூன்று இடங்களில் சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய மூன்று நாடுகள் இடம்பெற்றன.

ஹாங்காங் சீனாவின் ஒரு தன்னாட்சிப் பிராந்தியம் ஆகும், மேலும் சீனா தைவானையும் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது.

உலகளாவிய பங்குச் சந்தை தரவரிசையில் தைவானின் அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் டிஎஸ்எம்சி நிறுவனமாகும், இது தற்போது தைவானின் முதன்மை குறியீடான டாயெக்ஸ் (Taiex)-இல் சுமார் 42 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

 சிசி வெய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிசி வெய் (கோப்புப் படம்)

மாபெரும் வளர்ச்சிக்குக் காரணமான செயற்கை நுண்ணறிவு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

செயற்கை நுண்ணறிவு தொடர்பான செமிகண்டக்டர் சந்தையில் வலுவான மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நிலையைத் தன் வசம் கொண்டுள்ளதால், செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, டிஎஸ்எம்சி (TSMC) பங்குகள் இந்த ஆண்டில் 49 சதவீத லாபத்தைப் பெற்றுள்ளன.

தைவானின் பங்குச் சந்தை மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த அதிவேக உயர்வு, செயற்கை நுண்ணறிவு குறித்து உலகளாவிய மனநிலை எவ்வளவு சாதகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்த எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பப் பங்குகளின் விலையேற்றத்தைத் தூண்டியுள்ளது, இதனால் தைவான் மற்றும் தென்கொரியா போன்ற உற்பத்தி மையங்கள் மிகப்பெரிய அளவில் பயனடைந்துள்ளன.

மறுபுறம், அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள், பெருநிறுவன லாபங்களின் மந்தமான வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்தியா தத்தளித்து வருவதாக ப்ளூம்பெர்க் எழுதியுள்ளது.

"தைவானின் வளர்ந்து வரும் சந்தை மூலதனம் என்பது, அடிப்படையில் தொழில்நுட்ப வன்பொருள் துறையில் அதற்கு இருக்கும் பெரும் பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது, இது தற்போது செயற்கை நுண்ணறிவு முதலீட்டின் மையப்புள்ளியாக உள்ளது" என்று பிராங்க்ளின் டெம்பிள்டன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிதி மேலாளர் யி பிங் லியாவ் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார்.

"தொழில்நுட்ப வன்பொருள் இருப்பு குறைவாக உள்ள சந்தைகள், இப்போது தைவான் மற்றும் தென்கொரியா போன்ற தொழில்நுட்ப வன்பொருள் ஆதிக்கம் செலுத்தும் சந்தைகளால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன" என்று அவர் கூறினார்.

புதிய நிதி விதிமுறைகளும் டிஎஸ்எம்சி நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளன. கடந்த மாதம், தைவானின் நிதி ஒழுங்குமுறை ஆணையம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட பங்கில் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகளின் எண்ணிக்கையின் வரம்பை உயர்த்தியது.

புதிய வழிகாட்டுதல்களின் கீழ், தைவானிய பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் நிதி நிறுவனங்கள், டாயெக்ஸ் குறியீட்டில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பங்கிலும், தங்களுடைய மொத்த சொத்துக்களில் 25 சதவீதம் வரை இப்போது முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு, இந்த வரம்பு 10 சதவீதமாக மட்டுமே இருந்தது.

தற்போது, டிஎஸ்எம்சி மட்டுமே இந்த அளவுகோலைப் பூர்த்தி செய்கிறது. இந்த மாற்றம் தைவானுக்கு 6 பில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய முதலீட்டைக் கொண்டுவரக்கூடும் என்று ஜேபி மார்கன் சேஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

புதிய வழிகாட்டுதல்களின் கீழ், தைவானிய பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் நிதி நிறுவனங்கள், டாயெக்ஸ் குறியீட்டில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பங்கிலும், தங்களுடைய மொத்த சொத்துக்களில் 25 சதவீதம் வரை இப்போது முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு, இந்த வரம்பு 10 சதவீதமாக மட்டுமே இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024-ல் இந்தியா, ஹாங்காங்கின் பங்குச் சந்தையை முந்தியது, ஆனால் தற்போது நிலைமை மாறி வருவதாகத் தெரிகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களும், இந்தியாவும்

இந்த ஆண்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வரலாறு காணாத அளவில் தங்களது பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

உயர்ந்த பங்கு விலைகள், பலவீனமடைந்து வரும் ரூபாய் மதிப்பு மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் ஆகியவை இதற்குப் பின்னால் உள்ள காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இந்த ஆண்டில் இதுவரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து சுமார் 24 பில்லியன் டாலர்களைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முற்றிலும் செயற்கை நுண்ணறிவு பங்குகளின் மீதே கவனம் செலுத்தி வருகின்றனர், மேலும் இந்தியாவிற்குள் தற்போது செயற்கை நுண்ணறிவு துறையில் வலுவான மாற்றுத் தேர்வுகள் எதுவும் இல்லை.

இந்தியாவின் முதன்மை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.

எம்.எஸ்.சி.ஐ வளர்ந்து வரும் சந்தைகளுக்கான குறியீட்டில் இந்தியாவின் பங்கும் கடந்த ஆண்டின் 19 சதவீதத்திலிருந்து தற்போது சுமார் 12 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான், ஹாங்காங்கை முந்தி உலகின் நான்காவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உருவெடுத்திருந்தது.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹாங்காங் தற்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், தைவானும் இந்தியாவை முந்தியுள்ளது.

விரைவில் தென்கொரியாவும் இந்தியாவை முந்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தியா செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் பின்தங்கியுள்ளது என்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில், உலகளாவிய முதலீட்டாளரும் பொருளாதார விவகாரங்கள் நிபுணருமான ருசிர் சர்மா, இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்த பேட்டியில், "உலகளாவிய கவனம் இப்போது முழுமையாக செயற்கை நுண்ணறிவு மீதே இருப்பதால், மூலதனம் தற்போது இந்தியாவை விட்டு வெளியேறி வருகிறது" என்று தெரிவித்தார்.

மேலும்,"முதலீட்டாளர்கள் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், மேலும் இந்தியா இந்த பந்தயத்தில் ஒரு பலவீனமான நாடாகவே கருதப்படுகிறது. உலகம் தற்போது செயற்கை நுண்ணறிவுத் துறையின் (ஆரம்ப கட்ட) நிலையில் உள்ளது, இது செமிகண்டக்டர்கள், மெமரி மற்றும் கம்ப்யூட்டிங் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்தத் துறைகளில் இந்தியா பலவீனமாக உள்ளது"என்றார்.

தொடர்ந்து பேசிய ருசிர் சர்மா, "கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து 50 பில்லியன் டாலர்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். நிகர அந்நிய நேரடி முதலீடும் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகவே உள்ளது.

என்னுடைய 30 ஆண்டுகால முதலீட்டு அனுபவத்தில், இந்தியா மீது இத்தகைய அலட்சியத்தை நான் எப்போதும் பார்த்ததில்லை. 2013-ஆம் ஆண்டின் 'ப்ரஜைல் ஃபைவ்' (பலவீனமான ஐந்து நாடுகள்) காலகட்டத்தில் இந்தியா குறித்து எதிர்மறை எண்ணங்கள் இருந்தன, ஆனால் இன்றைய சூழ்நிலை அதைவிட மோசமாக உள்ளது. முதலீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் இந்தியாவின் பலவீனங்கள் இப்போது தெளிவாகத் தெரிகின்றன" என்றார்.

இந்த மாதத் தொடக்கத்தில், உலகளாவிய முதலீட்டாளரும் பொருளாதார விவகாரங்கள் நிபுணருமான ருசிர் சர்மா, இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்த பேட்டியில், "உலகளாவிய கவனம் இப்போது முழுமையாக செயற்கை நுண்ணறிவு மீதே இருப்பதால், மூலதனம் தற்போது இந்தியாவை விட்டு வெளியேறி வருகிறது" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து தங்கள் பணத்தை வேகமாகத் திரும்பப் பெற்று வருகின்றனர்.

இந்தியா ஏன் பின்தங்கியுள்ளது?

ருசிர் கூறுகையில், "இந்தியா தனது ஜிடிபி-யில் 0.6 சதவீதத்தை மட்டுமே ஆராய்ச்சிக்குச் செலவிடுகிறது, அதே நேரத்தில் தென்கொரியாவும் தைவானும் நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை செலவிடுகின்றன.

இந்த விஷயத்தில் இஸ்ரேல் உலக அளவில் முன்னணியில் உள்ளது. நமது தகவல் தொழில்நுட்பத் துறை நீண்டகாலமாக மலிவான உழைப்பு மற்றும் அவுட்சோர்சிங் மாதிரியையே நம்பியிருந்தது, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை அல்ல. இப்போது, இந்த பலவீனம் ஒரு பெரிய சவாலாக மீண்டும் உருவெடுத்து வருகிறது"என்றார்.

மே 20 அன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி.சுப்பாராவ், 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில நாளிதழில், தொழில்நுட்பத் துறையில் இந்தியா பின்தங்கியுள்ளது என்று எழுதியுள்ளார்.

"உலகெங்கிலும் சிறந்த வாய்ப்புகளைத் தேடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து மற்ற சந்தைகளுக்குத் தங்கள் நிதியை மாற்றியுள்ளனர். உலகளாவிய மூலதனம் இப்போது தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரங்களை நோக்கி, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, பயோடெக் மற்றும் தரவு மையங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது, ஆனால் இந்த அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் அதன் பங்கு குறைவாகவே காணப்படுகிறது. பணம் இந்த கண்டுபிடிப்புப் பொருளாதாரத்திற்குள் பாயும்போது, ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்"என்று சுப்பாராவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 700 பில்லியன் டாலராக உள்ளது, இது உலகிலேயே மிகப்பெரிய கையிருப்புகளில் ஒன்றாகும். ஆனால் இது அதிகப்படியான நம்பிக்கைக்கு வழிவகுத்துவிடக் கூடாது. இந்தத் தொகை சாதாரண காலங்களில் பெரியதாகத் தோன்றலாம், ஆனால் நெருக்கடி காலங்களில் அதன் உண்மையான மதிப்பு அதன் நம்பகத்தன்மையில் தான் உள்ளது"என்றும் அவர் கூறியுள்ளார்.

ப்ளூம்பெர்க் தனது செய்தி ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளது.

"செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பப் பங்குகளில் இந்தியாவின் பங்களிப்பு இல்லாதது அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம், இரான் போரினால் உள்ளூர் நிறுவனங்களின் லாபத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தம் இந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்கலாம்."

கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, "இந்த மோதல் நீடித்தால், பெருநிறுவனங்களின் லாபம் சுமார் 200 அடிப்படைப் புள்ளிகள் வரை குறையக்கூடும். விமான நிறுவனங்கள், பாலியஸ்டர் ஜவுளிகள், சிறப்பு இரசாயனங்கள், நெகிழ்வான பேக்கேஜிங் மற்றும் வாகனத் துறைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படக்கூடும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு