திருச்சி கிழக்கு தொகுதி - விஜய் ராஜிநாமா

பட மூலாதாரம், TNDIPR
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டிலும் வென்றார்.
சட்டப்படி, நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் ஒருவர் இரண்டு தொகுதியை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. அதன் அடிப்படையில் இரு தொகுதிககளில் வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை ராஜிநாமா செய்வது அவசியம்.
பதவியேற்பு நிகழ்ச்சி இன்று முடிந்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கடிதத்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசனைச் சந்தித்து நேரில் வழங்கினார்கள். ஆகவே, பெரம்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமே விஜய் தொடர்வார்.
தேர்தல் ஆணையம் திருச்சி கிழக்குத் தொகுதி காலியானதாக முறைப்படி அறிவித்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்தும்.
























