காணொளி: ஜம்மு காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவு - மக்கள் பாதிப்பு
ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
பூஞ்ச் பகுதியில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதையடுத்து, சாலைகள் சேதமடைந்திருப்பதையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது.
புத்காம் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதுடன் குடியிருப்புப் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பீர்வா மற்றும் காக் பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்திலும் கனமழை பெய்ததைத் தொடர்ந்து தானமண்டி சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 20-ஆம் தேதி அன்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



